கதவை தட்டி நின்றேன்
உள்ளே நுழைவதற்கு
நான் தேடும் ஒன்று
உள்ளே இருப்பதாய்
ஆழ்ந்த நம்பிக்கை ஒன்று
என் கரம் பற்றி இழுத்து வந்தது
கூட்டி வரும் நம்பிக்கைகளை
தேடும் போதெல்லாம்
என் கை மட்டுமே இருக்கின்றது
என் கையை
ஏன் பிடிக்காமல் போகுது
இந்த நம்பிக்கை...
தேடி வந்ததோ உள்ளிருக்கிறது
கதவு திறக்காமல் இருக்கிறது
கதவின் வெளியே நான் நிற்பது
பிடித்திருக்கிறதா
பிடிக்காமல் இருக்கிறதா...
மீண்டும் என் கைத்தொட்டு
நான் கை பார்க்க
மறைகிறது நம்பிக்கை
கதவை தட்டிக்கொண்டு இருக்கிறது
என் வெறும் கை...
நான் தேடும் ஒன்று
கிடைக்காமல் தான்
இந்த வாழ்க்கை தொடர்கிறது...
நிஜமா
நிழலா
தெரியாமலேயே
நம்பிக்கையும் தொடர்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக