ஒரு நதி
பல இடங்களில் விழுவது
அதன் இயல்பு
ஒருபோதும்
நதி
கானலாய் வீழ்வதில்லை
கடலைச் சேரும் வரை
நதியை இயக்கும் விசை
காதல்
மனம் சலசலக்கும்
காதல் வழிநடத்தும்
முதல் பயணத்தில் மட்டும்தான்
பாதைகள் கேள்விக் குறி
மனதில் இருக்கும்
நேர்கோடுகள் எல்லாம்
வளைகோடாவதுவே வாழ்க்கை
வளைகோடுகள் தான்
சித்திரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக