மரத்தை அழித்து
எந்தப் பறவையும்
கூடு கட்டுவதில்லை
தானே வளர்த்து
பிள்ளைக் கறியை
எவையும் உண்பதில்லை
நுனிப் புல்
மேயும் மாடு
கனிந்தப் பின்
உண்ணும் கிளி
பசிக்கு மட்டுமே
பாயும் புலி
வாழ்விடம் அமைக்க
குழி பறிக்கும் எலி
பங்கு போட்டுத்
திண்ணும் எறும்பு
பிணம் தின்னிப்
பெரும் கழுகு
அறம் இல்லாத
உயிர்களே இல்லை
கடவுள் இல்லாத
மனிதர்கள் இல்லை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக