ஜாதி சமய அரசியல் காழ்ப்புணர்ச்சி
இல்லாத நாடா இது...
மத்திய மாநில அரசுகளே
இதற்கு விதிவிலக்கல்ல
இவ்விரு உதவி ஆய்வாளர்களே
சிறு பொறி(க்கி)கள் தான்
நாட்டில் தீப்பிழம்புகள்
ஆளும் எதிர் கட்சிகளாய்
பற்றி எரிகின்றன
அதைச் சார்ந்தே பல
செல்வாக்கு மக்களும்
அண்டிப் பிழைக்கின்றன
அவர்கள் கூடவே சில
அன்றாடம் காய்ச்சிகளும்
நொண்டி அடிக்கின்றன
இதில் பிரிந்து வாழும் பிற
சுயநல மனிதர்கள் நாம்
சிங்கி அடிக்கின்றோம்
இதுபோல் பல
வன்முறைக் கொலை நடக்கக் கூடி
கும்மி அடிக்கின்றோம் இதுவரை
இம்மி அளவும் இவற்றில் மாற்றமில்லை
நாம் தமிழர் என தொடர்ந்து
மார்த் தட்டுவதும் மாறவில்லை...
அம்பானி வாழும் உலகமையா
அரை ஆடை மனிதனாய் தொடராதே
அறைந்தவனை அன்றே அடக்கம் செய்
ஓங்கிய கைகள் எல்லாம் ஓய்வெடுக்கட்டும்
ஒடுங்கிய கைகள் இனி துடிதுடிக்கட்டும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக