பூக்களைப் பறித்தவனின்
கண்களை
பூக்களும் பறிக்கிறது
வீடு வந்துவிட்டேன்
என் இதயத்தில் இன்னும்
பூக்கள் இருக்கிறது
இதய ஜன்னல் வழியே
என்னோடு சேர்ந்து
கனவு காண்கிறது
கனவிலும் பூக்களைப் பார்க்கிறேன்
பூக்கள் மட்டும்
கண்ணாடிப் பார்க்கிறது
என்னைப் பறித்த பூக்களே
எனக்கொரு கண்ணாடி
அங்கே இருக்கிறதா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக