ஆலம் விழுதுகள்
காற்றின் விரல்களை
பற்றிட விடுவதில்லை
கிளைகளின் விலகலை
வாழ்வெலாம் பார்த்ததால்
வீழ்வதில் வருத்தமில்லை
மண்ணில் புதைந்திடும் பயணத்திலே
தன் குழித் தான் பறிக்கும்
வலியிலும் வேர் சிரிக்கும்
மண் தோழமை நீர் கொடுக்கும்
வீழ்ந்தும் விழுதுகள் விடுவதாயில்லை
கிளைகளுக்கு பூ அனுப்பும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக