வெள்ளி, 16 ஏப்ரல், 2021

 


ஒரு மரம் வீழ்ந்தால்
சில பறவைகள் தவிக்கும்
ஆயிரமாயிரம் மரங்கள் வீழ்ந்தது போல்
பல்லாயிரம் பறவைகள்
மன வானில் ஒன்றாய் பறக்கின்றன
சிறகுகள் அத்தனையும்
நில்லாமல் தவித்துத் துடிக்கின்றன...

திரை வானில்
புன்னகை மழைப் பொழிந்தாய்
நிஜ வானில் மழை பொழிய
மண் நகை மரம் விதைத்தாய்
தன் கை தடுப்பூசி ஏற்றதும்
உயிர்த் துறந்தாய்
ஊர் கை உயிரோடு இருக்கவா
உனை இழந்தாய்...

இலைகளின் அசைவிலே
நீ சிரிப்பாய்
இறந்தும் நீ
ஓசோனில் ஓட்டை அடைப்பாய்
மரங்களின் நிழல்களால்
உயிர்களை அணைப்பாய்
கலையுலகில் கலைவாணர் வாரிசு
பூவுலகம் உள்ளவரை பூங்காற்றாய் நீ வீசு...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக