நிழலில் படுத்திருந்த அணில்
வெயிலை பார்த்துக்கொண்டே இருக்கிறது
உடல் மட்டும் தான் நிழலில்
உள்ளம் பாய்ந்து அலைகிறது வெயிலில்
தேனைக் குடிக்கும் பட்டாம்பூச்சி
தாகத்தை நினைத்துக்கொண்டே இருக்கிறது
ஒரு துளி குடிப்பதற்குள்
ஓராயிரம் நினைவுகளைக் குடிக்கிறது
இரவில் வந்த நிலவு
சூரியனுக்கு காத்துக்கொண்டே இருக்கிறது
காத்திருந்ததை காட்டிக் கொள்ளாமல்
காற்று வாங்குவதைப் போல கடக்கிறது
நானும்
வெயிலை பார்த்துக்கொண்டு
தாகத்தை நினைத்துக்கொண்டு
நிலவாக காத்திருக்கிறேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக