வெள்ளி, 2 ஏப்ரல், 2021

 


நாகரிகமான மனிதர்கள்
குப்பைகளை விட்டெரிந்து
தான் சுத்தமாய் வாழுகிறார்
குப்பைகளை பொறுக்கி
அழுக்காய் அலைகிறான்
அவன் யாரோ...

தானும் தன் குடும்பமும்
நல்லா இருக்க வேண்டி
கோவிலில் வணங்கிய தெய்வம்
சாலையில் குப்பைகளை
பொறுக்கி அலைவதை
சாக்கடையில் இறங்கி
முங்கி எழுவதை
கண்டும் காணாமல் போகின்றார்
கண் மூடியே கடவுளைக் காண்கின்றார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக