நகரத்தில்
விடியவிடிய தேடியும்
இரவு காணவில்லை...
இமைகள் மூடிய பின்
வந்து போவது
இரவா கனவா...
தெரியவில்லை
கிராமத்தில்
இரவென்று சொல்வதிலும்
அரிதாரம் இல்லாமலில்லை
அடர்ந்த காட்டினுள்
இரவு இருக்கலாம்
அதன் அடையாளம்
நியாபகமில்லை
கடைசியாக
பார்த்த இரவு
கண்டிப்பாக இப்போது இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக