பாலை மனத்தில்
எங்கும் கானல் நீராய்
நீ...
அனல் காற்று எழுதும்
மண்ணில் காதல் கடிதம்
பாதம் வேகமாகப் படிக்கும்
என்னில் தீயை வளர்க்கும்
இரவு மெல்லப் படர்ந்து
கட்டி என்னை அணைக்கும்
பற்றி எரியும் தீயை
பக்குவமாய் அணைக்கும்
அந்த நொடியில் உள்ளம்
உலகை முழுதும் மறக்கும்
இரவாக உன்னை நினைக்கும்
இன்பம் பனி மழையாய் நனைக்கும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக