பிரபஞ்சத்தின் வேர்கள் எல்லாம்
அன்னை மார்பில்
அனைத்தும் வழங்கி இருக்கிறது
நம் உமிழ் நீருக்கு
உயிர் பாலை அல்லவா
விலையாகத் தந்திருக்கிறது
தன் உறக்கத்தையும்
விழித்திருந்து
நமக்குத் தந்தவள்
நாம் அழுதால்
தான் கலங்கும்
கண்கள் உடையவள்
கண்கள் கண்ட
ஓர் கடவுள்
அவளே உமையவள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக