ஒரு ராத்திரி பொழுதில்
நீ எனக்கு அறிமுகம்
எப்போது என்று நியாபகமில்லை
ஒருபோதும் நீயும் கேட்டதில்லை
வார்த்தை இல்லாத உலகத் தாய்மொழியில்
இதுவரை தொடர்பு கொண்டோம்
கண்களில் விழுகிறாய்
கைகளில் விலகுகிறாய்
கண்களுக்கு மெய்யானாய்
மெய்யிற்க்குப் பொய்யானாய்
என் மெய் இங்கு பொய்யானால்
இந்த பொய் உன் மெய் சேர்ந்திடுமா...
இப்படி நான் கேட்டிட
உனக்கு என்மேல் கோபமா
அதனால்தான் இன்று
அமாவாசை தினமா...
இதுகூட உன் பாசாமா
மாதமொரு முறை
மெல்லப் பொங்கி வருமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக