வெள்ளி, 10 ஜூலை, 2020



மலர்கள் தேடி அலையும்
வண்டுகளையும்
வண்ணத்துப்பூச்சிகளையும்
பார்க்கும் போதெல்லாம்
அதைச் சூடிச் செல்லும்
பெண்களைப் பார்த்துக் 
கோபம் வருகிறது

மறைந்த மலர்களின்
மணம் எல்லாம் பழிவாங்கும்
திருமணமோ...

மீண்டும் மீண்டும்
அவள் மலர் சூடிட
மறுமணமோ...

தேடி அலையும்
என் கண்களிடம்
வாடிக் கிடந்த 
ஒரு மலர் சொன்னது...

நான்
மலர் வாங்கவில்லை
திரும்பி வந்துவிட்டேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக