மலர்கள் தேடி அலையும்
வண்டுகளையும்
வண்ணத்துப்பூச்சிகளையும்
பார்க்கும் போதெல்லாம்
அதைச் சூடிச் செல்லும்
பெண்களைப் பார்த்துக்
கோபம் வருகிறது
மறைந்த மலர்களின்
மணம் எல்லாம் பழிவாங்கும்
திருமணமோ...
மீண்டும் மீண்டும்
அவள் மலர் சூடிட
மறுமணமோ...
தேடி அலையும்
என் கண்களிடம்
வாடிக் கிடந்த
ஒரு மலர் சொன்னது...
நான்
மலர் வாங்கவில்லை
திரும்பி வந்துவிட்டேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக