வெள்ளி, 3 ஜூலை, 2020



தினமும் உனக்கு மலர் கொடுப்பேன்
மறைந்திருந்தே பார்த்திருப்பேன்
ஓரக்கண்ணால் பார்க்கும் போதே 
சொர்க்க வாசல் அடைந்திருப்பேன்

சொக்கி நின்ற நேரம் நீயும்
மலர் எடுத்து சென்றிருப்பாய்
மறைந்து தானே நானிருந்தேன்
இருந்தும் என்னைச் சிறையெடுத்தாய்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக