எல்லோர்க்கும் பொதுவாகவே
உலகம் விடிகிறது
தனக்காக மட்டும் என்று
மனம் யாவும் நினைக்கிறது
பொழுது சாயும் வேளையிலும்
மனது சாயவில்லை
உடல் சாகும் போதினிலும்
மனம் சாவதில்லை
உயிர் உள்ள போதே
மனம் இன்றி போனால்
உடல் என்னவாகும்...
அன்பே
நீ இல்லாதது போல்
நோகும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக