ஏழு வயது சிறுமியிடம்
என்ன கண்டான் காமுகன்
தொடர்ந்து நடக்கிறதே - இருந்தும்
காரணம் அறிய மறுக்கிறதே
பொருளைப் பின் தொடர்ந்து
பொருளற்றுப் போகுது வாழ்க்கை
வறுமை மிக மிகுந்து
வஞ்சம் பெருகும் சமூகம்
அறிவைத் தேடி அலைந்து
ஆன்மாவை முற்றும் மறந்து
அகிலம் யாவுமே முரண்பாடு
சொந்த வீட்டிலும் இல்லை உடன்பாடு
காமம் ஒன்றே வழி - கடவுளிடம்
யாரும் கடந்து செல்ல
அதைப் பாவம் என்று சொல்லி
மண் பறித்ததை புதைத்து வைத்தால்
அதை அறியாமல் வளர்ந்திடும்
மனம் வயதறியாமல் புணர்ந்திடும்
மறைப்பதின் விளைவே இவை
பதின் பருவம் வளர்ச்சியின் சிதைவே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக