அன்னைக்கு மகனா
அன்புக் காதலனா
நடுவில் வந்த நண்பனா
காத்திருக்கும் எமனா
எனக்கே நானா
உனக்கே நீயா
யாருக்கு யார் சொந்தம்...
வந்து போகும் உலகில்
வந்து போகும் எவையும்
சொந்தம் இல்லை என்றால்
சொர்க்கம் ஆகும் பூமி
கவிதை கூட அதுவே
நம் கையில் எதுவும் இல்லை
வந்து போகிறது
கண்டு களித்திருப்போம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக