வெள்ளி, 2 மே, 2025


உன் பெயரை 

நதியின் காதுகளில்

துடுப்பு ஓதும்


நதி

மௌனத்தைத் தாண்டி வந்து

என் காதில் சொல்லிடும்

உன் பெயரை


துடுப்பு தூரிகையாகி

நீரில் உனை வரையும்

கண்ணில் நீர் பெருகி

என்னிலும் வரையச் சொல்லி

துடுப்பிற்கு கொடுப்பேன்

ஓராயிரம் முத்தம்... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக