சனி, 17 மே, 2025

"காசாவில் கடந்த 18 மாதங்களில் 15000 குழந்தைகள் பலி"

 


விமானம் வருவதைப் பார்த்து

ஓடி வருகிறது குழந்தைகள்

ரொட்டித் துண்டிற்காக


விமானம் வருவதைப் பார்த்து

மெல்ல நடந்து வருகிறது குழந்தைகள்

ரொட்டித் துண்டிற்காக


விமானம் வருவதைப் பார்த்து

ஊர்ந்து வருகிறது குழந்தைகள்

ரொட்டித் துண்டிற்காக


விமானம் வருவதைக் கேட்டு

வேண்டிக் கொள்கின்றனர் குழந்தைகள்

குண்டு மழைக்காக... 


விமானங்கள் வருகின்றன போகின்றன

என்ன செய்துகொண்டு இருக்கிறார்களோ

புதையுண்ட 15000 குழந்தைகளும்... 


அந்தக் குழந்தைகளின் ஆன்மாக்கள் வேண்டிடும்

இஸ்ரேலின் குழந்தைகளும் இனி பலியாகிடக் கூடாது என்று

வேறென்ன வேண்டிடும் குழந்தைகள்... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக