இன்று:
எல்லோரையும் கடித்துக் குதறுகிறேன்
எல்லோரையும்...
என்னை எனக்கே பிடிக்காமல் போனதால்
எல்லோரையும் கடித்துக் குதறுகிறேன்
கல்லெறிந்து கொல்லுங்கள்
நானும் தப்பித்துக் கொள்கிறேன்
மாறாக போகட்டும் என்று விட்டு விட்டீர்கள் ஏனோ...
நாளை:
எல்லோரையும் நேசிப்பேன்
எல்லோரையும்...
என்னை எனக்குப் பிடித்துப் போகும்
எல்லோரையும் நேசிப்பேன்
நீங்களும் நேசியுங்கள்
நாளை இல்லாவிட்டாலும் பரவாயில்லை
நாளை மறுநாள் நிச்சயம் மாறி விடுவீர்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக