தரையில்
சமதளத்தில்
திடீர் உயர்வு...
எப்படித் தூக்கினாள்
கடைசிவரை அவள் கண்கள்
அதை சொல்வதே இல்லை
நான் தரையில் இல்லை
இதை யாரும் அறியவில்லை
விழுந்து விடவும் இல்லை
ஆழம் தெரியாத
வானில் இருக்கிறேன்
அழுகை இல்லை
அலறல் இல்லை
சிறுவன் இல்லை
இப்போது நான் இறைவன்
ஆம்
பார்க்காததை
என்னுள் பார்க்கிறேன்
கேளாததை
என்னுள் கேட்கிறேன்
மௌனமாய் நிற்கிறேன்
மௌனமாய் மாறுகிறேன்
இப்போது நான் இறைவன்
உலகின் மொத்த அசைவும்
கலைக்காத மௌனத்தை
உன் இமைகளைச் சிமிட்டி
கலவரம் ஆக்குகிறாய்
கடவுளை ஏனடி
உயிர்பலி கேட்கிறாய்?
தரையில்
சமதளத்தில்
திடீர் உயர்வு
எனை அப்படியே விட்டுவிடு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக