எனக்குத் தெரியும்
அது நீயில்லை
நீரும் இல்லை
நான் மட்டும்தான்
ஆனாலும் நம்ப மறுக்கிறேன்
ஒருநாள்
நான் நானாகும் போது
நானிருக்க மாட்டேன்
அப்போது நீயும்
ஒரு மீனைப் பார்க்கலாம்
அது நானாகத் தெரியலாம்
உள்ளுக்குள் ஓடி மறையலாம்
நீ நீயாகும் வரை
அதைத் தேடி
அங்கேயே நிற்கலாம்
திடீரென குளத்து மீன்
துள்ளிக் குதிக்கலாம்
சிறகுகள் முளைத்து
பறவையாய் பறக்கலாம்
வானத்தில் நுழைந்து
மனதில் வந்தமரலாம்
ஆம்
எதுவும் நடக்கலாம்
நீ நீயாகும்வரை
நான் நானாகும்வரை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக