பணம் கொடுத்தால்
பட்டா வாங்கிடும்
பகட்டு உலகம்
எல்லோர்க்குமான பெருவெளி
நாளும் சுருங்கக் கண்டு
நானும் சுருங்கினேன்
காற்று வந்து
என்னுள் நிரம்பி
நிமிரச் செய்கிறது
பஞ்ச பூதங்களை
பஞ்சு மிட்டாய் என
வாங்கிச் சுவைக்கிறார்
ஒரு பூதம்
ஒரு நாழிகை
போதும்
எல்லோரையும்
அது வாங்கிவிடும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக