மரணத்தின் போது
குழி தோண்டுபவர்கள்
நான்கு பேர்தான்
மரணத்தின்
இரகசியங்களை தோண்டுபவர்கள் தான்
மற்ற எல்லோரும்
நான் இல்லாத
நாம் தான் வானம்
தள்ளி நின்று தன்னை
விசாலமாய் பார்க்கும் இடம்
வந்து போகும் எல்லோரும்
மேகங்கள்
இதயத்தில் ஒளிரும் விளக்கு
நட்சத்திரங்கள்
இதயத்தில் கசியும் ஈரம்
மழை
எதிர்பாரா நிகழ்வுகள்
மின்னல்
எதிர்பார்க்கும் நிகழ்வுகள்
இடியோசை
பசுமையான நினைவுகள்
வானவில்
எதுவுமே ஒட்டாமல்
வானம்
ஒட்டு உறவு அறுந்து
இறந்து போகுமிடம்
வானம்
மண்ணில் மட்டும்தான்
வானில் ஏது முகவரி
முகவரி இல்லாத
யாவும் வானம்
வானம்
எப்போதும் காத்திருக்கிறது
அழகாக பூத்திருக்கிறது
கண்மூடி
பார்க்கும் வானம்
ஞானம்
கண்திறந்து
பார்க்கும் ஞானம்
வானம்
தரையில்
சமதளத்தில்
திடீர் உயர்வு...
எப்படித் தூக்கினாள்
கடைசிவரை அவள் கண்கள்
அதை சொல்வதே இல்லை
நான் தரையில் இல்லை
இதை யாரும் அறியவில்லை
விழுந்து விடவும் இல்லை
ஆழம் தெரியாத
வானில் இருக்கிறேன்
அழுகை இல்லை
அலறல் இல்லை
சிறுவன் இல்லை
இப்போது நான் இறைவன்
ஆம்
பார்க்காததை
என்னுள் பார்க்கிறேன்
கேளாததை
என்னுள் கேட்கிறேன்
மௌனமாய் நிற்கிறேன்
மௌனமாய் மாறுகிறேன்
இப்போது நான் இறைவன்
உலகின் மொத்த அசைவும்
கலைக்காத மௌனத்தை
உன் இமைகளைச் சிமிட்டி
கலவரம் ஆக்குகிறாய்
கடவுளை ஏனடி
உயிர்பலி கேட்கிறாய்?
தரையில்
சமதளத்தில்
திடீர் உயர்வு
எனை அப்படியே விட்டுவிடு...
எனக்குத் தெரியும்
அது நீயில்லை
நீரும் இல்லை
நான் மட்டும்தான்
ஆனாலும் நம்ப மறுக்கிறேன்
ஒருநாள்
நான் நானாகும் போது
நானிருக்க மாட்டேன்
அப்போது நீயும்
ஒரு மீனைப் பார்க்கலாம்
அது நானாகத் தெரியலாம்
உள்ளுக்குள் ஓடி மறையலாம்
நீ நீயாகும் வரை
அதைத் தேடி
அங்கேயே நிற்கலாம்
திடீரென குளத்து மீன்
துள்ளிக் குதிக்கலாம்
சிறகுகள் முளைத்து
பறவையாய் பறக்கலாம்
வானத்தில் நுழைந்து
மனதில் வந்தமரலாம்
ஆம்
எதுவும் நடக்கலாம்
நீ நீயாகும்வரை
நான் நானாகும்வரை...
ஒரு சொல் வந்து
கூட்டிச் செல்லும்
புதிதாக
ஒரு வழி
திறவும்
திரும்பிட நினைத்தால்
பாதை அழியும்
புது வழி
அதுவும்
தனி வழி
இறந்தால் மட்டுமே
முன் நகர்த்தும்
சில சொற்களை
அறிமுகப்படுத்தும்
பல சொற்களை
அலட்சியப்படுத்தும்
மறைந்த உறவுகளை
நியாபகப்படுத்தும்
கூட்டிச் சென்ற
சுவடுகள் அழித்து
அதே இடத்தில்
வந்து விடும்
இறந்து இறந்து
முன் நகர்ந்த
நினைவுகளில்
திரும்பத் திரும்ப
தவமிருக்கிறேன்
ஒரு சொல் வந்து
கூட்டிச் செல்லும்
காத்திருக்கிறேன்...
நீ பேசினால் போதும்
அது பொய்யோ மெய்யோ
நீ பேசினால் போதும்
நீ பேசினால் போதும்
அது வம்பாகவோ அன்பாகவோ
நீ பேசினால் போதும்
நீ பேசினால் போதும்
அது கனவோ நினைவோ
நீ பேசினால் போதும்
நீ பேசினால் போதும்
அது மௌனமோ சைகையோ
நீ பேசினால் போதும்
நீ பேசினால் போதும்
இந்த ஜென்மத்திலோ
அடுத்த ஜென்மத்திலோ
நீ பேசினால் போதும்
நீ பேசினால் போதும்
என் கல்லறையிலோ காதருகிலோ
நீ பேசினால் போதும்
நீ பேசினால் போதும்
என் கண்கள் மூடி இருந்தாலும்
இதயம் ஓய்வு எடுத்தாலும்
நீ பேசினால் போதும்...
எளிமை
அதன் பெருமை
காந்தி
ஆடம்பரம்
அதன் பெருமை
மோடி
பெயர் தெரியாத
பெரும்பான்மையினர் தலைவர்
காந்தி
அதானி அம்பானி
சிறுபான்மையினர் தலைவர்
மோடி
மக்களோடு மக்களாய்
நடந்து கொண்டிருந்தவர்
காந்தி
மாளிகை மாளிகையாய்
அலைந்து கொண்டிருப்பவர்
மோடி
குடிசை உள்ளே
குனிந்து போவார்
காந்தி
குடிசை வெளியே
நிமிர்ந்தே பெருக்கி
புகைப்படம் எடுப்பார் மோடி
ஒரு மாநிலப் புதல்வர்கள்
ஒரே போல இருப்பதில்லை
சொந்தக் காலில் ஒன்று
ஓசி விமானத்தில் ஒன்று