உன்னைச் சொந்தம் என்று சொல்லும்
நானே எனக்குச் சொந்தமில்லை
நித்தம் முத்தமிடும் பாதங்களுக்கும்
பாதச்சுவடுகள் சொந்தமில்லை
தாந்தான் சுரந்தெடுத்தத் தேன்தான்
மலர் இதழ்களுக்கு சொந்தமில்லை
கட்டிவைத்த மழைமாலை
காற்றடித்தால் கொட்டிவிடும்
கார்மேகத்திற்குச் சொந்தமில்லை
செய்த சரி
செய்யும் பிழை
ஏதும் எனக்குச் சொந்தமில்லை
மெய்யுள்ளே பூத்திருக்கும் உயிர்
ஒருநாள் உதிர்ந்துவிடும்
உன்னைச் சொந்தம் என்று சொல்லும்
நானே எனக்குச் சொந்தமில்லை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக