தேனாக ஓடும் நதியை
வீணாகச் செய்யும் மதியை
தானாகப் புரிந்துகொள்ளும்
காலம் வரும்
கார்மேகம் வருமா
தண்ணீரைத் தருமா
கான்கிரீட்டும் கரன்சியும்
கற்றுத் தரும்
அன்பில்லாமல் போகும்
பண்பில்லாமல் போகும்
யாதும் பாழாய் போகும்
அதுவும் பழகிப் போகும்
நீர் வங்கிகள் வேண்டும்
நீர்க் கோவில்கள் வேண்டும்
நீர் மதமாக வேண்டும்
நீர் மாற வேண்டும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக