ராமனுஜரோ
புத்தரோ
காந்தியோ
வாழ்ந்து காட்டிய எவரும்
சிலைகள் கட்டிய சரித்திரமில்லை
சிலைகள் தான்
மகான்களைக் காக்கும் என்றால்
அது சிலைகள் அல்ல பிழைகள்
பெரிய சிலைகள்
நிறுவனங்களின் கிளைகள்
சிறிதென்றும்
பெரிதென்றும்
சிலையில் கூட
பேதங்கள் நிறுவுகிறார்
ராமானுஜரை வைத்து
ராமனை வைத்து
ராஜ்ஜியம் செய்கிறார்
பூஜ்ஜியம் பிறந்த மண் இது
மறந்துவிட்டார்
அல்லது
மறைத்துவிட்டார்
அகிலம் மறைந்தாலும்
அண்டம் மறைந்தாலும்
பூஜ்ஜியம் மறையாதது
இறைவன் ராஜ்ஜியம்
அது தான் அது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக