மியாவ்... மியாவ்...
நாரதர் போலவே
கலகம் செய்துவிட்டு போகிறது
ஏதுமே தெரியாததை போல
நாராயண... நாராயண...
நல்ல சகுனம் தான்
பூனை குறுக்கே போவது
மியாவ்... மியாவ்...
தன்னை மட்டுமல்ல
கேட்போரையும்
தட்டியெழுப்பிக் கொண்டே போகிறது
மியாவ்... மியாவ்...
பசி இல்லை
பக்கம் வா என்கிறது
பாசத்தோடு எலியிடம்
மியாவ்... மியாவ்...
கதாநாயகன் போல
தன்னுடைய நடைக்கு
தானே பின்னணி இசைக்கிறது
மியாவ்... மியாவ்...
மியாவ்... மியாவ்...
சொல்லாத பூனையும்
கேட்காமல் நாமும்
தூங்கிப் போகிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக