தை தை என்றே
குதிக்கும் மனம்
தை வந்த போதிலும்
நிற்கவில்லை
தை தை என்றே
குதிக்கிறது...
உழவர் திருநாளில்
இன்பத்(தை)
இலாபத்(தை)
நலத்(தை)
வரத்(தை)
உலகத்(தை)
வி(தை)த்த வி(தை)
பார்த்துக் கொள்ளட்டும்
என்றும் மனம்
குழந்(தை)யாகத் துள்ளட்டும்...
"விவசாயத்(தை) துதிப்போம்
விவசாயிகளை மதிப்போம்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக