மழை
பொழிந்து கொண்டே இருந்தது
வெளியே நின்றதும்
உள்ளே தொடங்கியது
பொழிந்து கொண்டே இருக்கிறது...
இரண்டும்
கண்களில் தெரிகிறது
இதயத்தை நிறைக்கிறது
குளிர்ந்த நீர்த் துளி
தொட்டும் தொடாமலும்
உடல் வெப்பம் ஆகியது...
வானும் நானும்
பேசிக் கொள்கிறோம்
கார்மேகம் சூழக் காத்திருக்கிறோம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக