வெள்ளி, 1 ஜனவரி, 2021

 


கொடுத்ததும்
திரும்பக் கிடைக்கிறது
புன்னகை

தானும் தருவதில்லை
திரும்பத் தருவதும் இல்லை
பிச்சைக்காரர்கள்

உண்மையான புன்னகையில்
கடவுள் தெரிகிறாள்
கொஞ்சநேரம் காட்சித் தந்து
மறைந்து விடுகிறாள்
கடவுள் தோன்றுமிடம்
மீண்டும் மீண்டும்
வந்துப் பார்க்கிறேன்
அவள் வேறு வேறு
இடத்தில் தோன்றிக்
காட்சித் தருகிறாள்...

நிலைக் கண்ணாடியில்
தெரிவதில்லை
நிலையில்லாத
கண் ஆடிகளில் தெரிகின்றாள்
எங்கும் நிறைந்து இருக்கின்றாள்
ஓரிடத்தில் தங்க மறுக்கின்றாள்
கனவில் வந்துச் சிரிக்கின்றாள்
உனக்குள் நானே என்கின்றாள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக