கொடுத்ததும்
திரும்பக் கிடைக்கிறது
புன்னகை
தானும் தருவதில்லை
திரும்பத் தருவதும் இல்லை
பிச்சைக்காரர்கள்
உண்மையான புன்னகையில்
கடவுள் தெரிகிறாள்
கொஞ்சநேரம் காட்சித் தந்து
மறைந்து விடுகிறாள்
கடவுள் தோன்றுமிடம்
மீண்டும் மீண்டும்
வந்துப் பார்க்கிறேன்
அவள் வேறு வேறு
இடத்தில் தோன்றிக்
காட்சித் தருகிறாள்...
நிலைக் கண்ணாடியில்
தெரிவதில்லை
நிலையில்லாத
கண் ஆடிகளில் தெரிகின்றாள்
எங்கும் நிறைந்து இருக்கின்றாள்
ஓரிடத்தில் தங்க மறுக்கின்றாள்
கனவில் வந்துச் சிரிக்கின்றாள்
உனக்குள் நானே என்கின்றாள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக