விடிந்து சாயும்
ஒவ்வொரு நாளும்
கண்கள் திறந்து மூட
இடையினில் புதிராய் வாழ்க்கை
மலர்ந்து விழும்
பூக்களிலும்
ஒரு உலகம் இருக்கிறது...
பார்வையாளனாய் மாறினால்
அங்கும் நாடகம் நடக்கிறது
வண்டு தும்பி தேனி பட்டாம்பூச்சிகள்
இயல்பாய் நடிக்கிறது...
தூர இருந்து
மூங்கிலொன்று
பின்னணி இசைக்கிறது
காதல் காட்சியில்
வான தேவதைகளாக
வண்ணக் கிளிகள் பறக்கிறது
வெட்டுக்கிளி ஒன்று
வில்லத்தனத்தோடு
சட்டெனத் தாவியது
அது ஒற்றை ஆளில்லை
பல லட்சம் படையாக
போர்க்களம் ஆகியது
தன்னந்தனியாக
வெண்புறா வந்து
ஏதோ பேசியது...
வெட்டுக்கிளி கூட்டம்
பசிக்கு உணவருந்தி
அமைதிப்படையானது
அடுத்த வேளை உணவுக்கு
அடுத்த ஊர் போனது...
அணு ஆயுதங்கள் இல்லை
ஜநா சபை இல்லை
யாரும் நோகவில்லை
யாதும் ஊரே யாவரும் கேளிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக