வெளிச்சம் பார்க்க
மறுக்கும் கண்கள்
மூடி இருந்தாலும்
வேங்கைப் புலியாய்
ஒளி பாய்ந்து
உள்ளே நுழைகிறது...
இதயம் கிழித்து
இரத்தம் குடித்து
திரும்பப் போகிறது
இருள் படர்ந்து
காயங்கள் மீது
கட்டுப் போடுகிறது...
இருட்டில் புதைந்த
இதய விதை
மீண்டும் முளைக்கிறது
இரத்த வெறி
கொண்ட ஒளி
வெளியில் காத்துக் கிடக்கிறது...
ஒளியும் இருளும்
உந்தன் நினைவுகள்
என்றும் பிரிவதில்லை
நினைவும் கனவும்
வலிதான் இருந்தும்
உனைப்போல் விலகவில்லை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக