வியாழன், 7 ஜனவரி, 2021

 


கவிஞனாக விரும்பாதே...
நீ எல்லோருடனும் இணைந்திருப்பாய்
எல்லோரும் உன்னைப் பிரிந்திருப்பார்
நீ விரும்பும் வார்த்தைகள் கூட
உன்னைவிட்டு அழகாகப் பிரிந்து செல்லும்
உன் கண்ணீர் வரிகளுடன்
சிலர் சிரித்துக் கொண்டிருப்பார்
நான்கு பேர் தட்டிக் கொடுத்தாலும்
நாற்பது பேர் திட்டித் தீர்ப்பார்
தனிமை உன்னைத் தின்று தீர்க்கும்
உலகை நேசிப்பாய்
உன்னை வெறுப்பாய்
வறுமை உந்தன் கைப் பிடிக்கும்
கண்டிப்பாக காதலி உன்னைக் கைவிடுவாள்
தாடி வளர்ப்பாய்
சாராயம் குடிப்பாய்
புகைப் பிடிப்பாய்
இன்னும் இன்னும்
தேடிக் கண்டுபிடிப்பாய்
தீது யாவையும் கடைபிடிப்பாய்
கொஞ்சம் கொஞ்சமாய்
உன்னை நீயே தொலைப்பாய்
கவிஞனாக விரும்பாதே...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக