அன்னாந்து பார்க்கவே ஆசை
நீ என் மேகம்
நிற்காமல் செல்கிறாய்
பின் தொடர வைக்கிறாய்
சூரியன் சுடமால்
குடையும் பிடிக்கிறாய்
கலைந்து விடுகிறாய்
மறைந்து விடுகிறாய்
மாறுவேடம் போடுகிறாய்
தேடி அலைவதைக் கண்டு
கண்ணீரும் வடிக்கிறாய்
தடம் இல்லாமல் நடக்கிறாய்
அதை என் நெஞ்சில் பதிக்கிறாய்...
நீ இல்லை என்றால்
வானம் கண்களுக்குச் சிறையாகிறது
நீ வந்துவிட்டால்
இமைகள் சிறகாகும்
சிறையும் பொடியாகும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக