வானக் குழிப் பறித்தேன்
சில மேகங்களுக்குப் பின்னால்
கிடைத்ததொரு வெண்ணிலவு...
பத்து விரல் போதவில்லை
பத்திரமாய் ஏந்தி வந்தேன்
இரு கண்களில்...
பாதி இரவில் அரைநிலவு
பார்த்துக் கொண்டே இருந்தேன்
மறைந்தது நிலவு...
மீண்டும் குழிப் பறித்தேன்
வானம் சிரிக்கிறது
மேகம் அழுகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக