தன் கை
வலிக்கும் போதெல்லாம்
தந்தை நியாபகம்...
இயற்பியலின் தந்தை
நியூட்டன்
உளவியலின் தந்தை
பிராய்ட்
கணிதவியலின் தந்தை
யூக்ளிட்...
எனது தந்தை
இல்லை என்றால்
இவர்கள் யாரும் நானறியேன்
உன் உயரம்
வளர்ந்திடவே
நான் குதித்த நாட்கள் உண்டு
நீ
தோளில் தூக்கும் போதெல்லாம்
நான் உணர்ந்ததில்லை
உன்னைத் தாண்டி நான் வளர
நீ எண்ணியதை
தோளுக்கு மேல்
வளர்ந்ததுமே
தோழன் ஆனாய்
விண்ணுக்கு மேல்
நீ வளர்ந்து போன பின்பு
வானம் எனக்கு
நண்பனனான்...
மன பாரம் கொண்டு
வானம் பார்க்கும் போதெல்லாம்
சுமையை வாங்கிக் கொள்வது
நண்பா உன் கையா...
என் தந்தையா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக