வண்ணங்களுக்கும்
வரையும் விரல்களுக்கும்
சுதந்திரம் கொடுங்கள்
எண்ணங்களைத் தடையின்றி
வழிய விடுங்கள்
நாம் புதைக்கும்
உண்மைக்கு எல்லாம்
சிறகுகள் கொடுத்து
பறக்க விடுங்கள்
சிதறும் இறகுகள் கூட
இரகசியம் பேசும்...
பட்டாம்பூச்சிகள் கூட
அப்படிச் சிதறிய
இறகுகள் தான்
பூக்களின் காதினில்
இரகசியம் பேசிடும்...
வரைந்த கலைஞனைக்
காணவில்லை
கண்ணுக்குத் தெரியாததால்
கடவுளாகக் தான்
இருக்க வேண்டுமா என்ன...
கொரோனா ஆகவும்
இருக்கலாம்
டெக்னாலஜி
டெர்மினேட் செய்த
வயோதிகருக்குத் தான்
மரண வரம் கொடுக்கிறது
இந்த வைரஸ்
அழிக்கத் தெரிந்தது
படைத்தும் இருக்கலாம்
அந்த ஓவியத்தை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக