வெள்ளி, 27 மார்ச், 2020

ஓவியம்


வண்ணங்களுக்கும்
வரையும் விரல்களுக்கும்
சுதந்திரம் கொடுங்கள்

எண்ணங்களைத் தடையின்றி
வழிய விடுங்கள்

நாம் புதைக்கும்
உண்மைக்கு எல்லாம்
சிறகுகள் கொடுத்து
பறக்க விடுங்கள்

சிதறும் இறகுகள் கூட
இரகசியம் பேசும்...

பட்டாம்பூச்சிகள் கூட
அப்படிச் சிதறிய
இறகுகள் தான்

பூக்களின் காதினில்
இரகசியம் பேசிடும்...

வரைந்த கலைஞனைக்
காணவில்லை

கண்ணுக்குத் தெரியாததால்
கடவுளாகக் தான்
இருக்க வேண்டுமா என்ன...

கொரோனா ஆகவும்
இருக்கலாம்

டெக்னாலஜி
டெர்மினேட் செய்த
வயோதிகருக்குத் தான்
மரண வரம் கொடுக்கிறது
இந்த வைரஸ்

அழிக்கத் தெரிந்தது
படைத்தும் இருக்கலாம்
அந்த ஓவியத்தை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக