வியாழன், 19 மார்ச், 2020


சட்டை மீதிருந்த 
கம்பளிப்பூச்சியை
செடியின் மீது இடம் மாற்றி
பெருமிதம் கொண்டேன்

அது தன்னையே
ஒரு பறவைக்கு தந்து
பெருமிதம் கொண்டது

பெரிய கோடு ஒன்று
அழிக்கப்படாமலேயே
சிறு புள்ளி ஆனது

கண்ணுக்குத் தெரியாத
வைரஸின் மீதுதான் 
எத்தனைக் கோபம் நமக்கு

கண்ணுக்குத் தெரிந்த வைரஸாக
நாமும் பெருகிக்கொண்டே இருக்கிறோம்
இயற்கையை அழித்து அழித்து...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக