என்
வட்ட நிலா வந்தமர
இருக்கையை செய்து விட்டேன்
எட்ட நின்றே பார்க்கிறது
அதன் எண்ணம்
எனக்கு விளங்கவில்லை
பட்டுடலை தீண்டிப் பார்க்க
பற்றுடனே காத்து நின்றேன்
இரு பத்து மாத
குழந்தை இது
பத்திரமாய் பிறக்க விடு
திங்கள் இருமுறை நீ
மறைந்திடுவாய்
அன்றும் என்னில் நீ
நிறைந்திடுவாய்
மனக் கண்ணில்
நுழைந்து என்னைத் தழுவுகிறாய்
நிஜம் தன்னில்
எட்ட நின்றே வினவுகிறாய்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக