ஞாயிறு, 8 மார்ச், 2020

என் 
வட்ட நிலா வந்தமர 
இருக்கையை செய்து விட்டேன்

எட்ட நின்றே பார்க்கிறது
அதன் எண்ணம்
எனக்கு விளங்கவில்லை

பட்டுடலை தீண்டிப் பார்க்க
பற்றுடனே காத்து நின்றேன்
இரு பத்து மாத 
குழந்தை இது
பத்திரமாய் பிறக்க விடு

திங்கள் இருமுறை நீ 
மறைந்திடுவாய் 
அன்றும் என்னில் நீ
நிறைந்திடுவாய் 

மனக் கண்ணில்
நுழைந்து என்னைத் தழுவுகிறாய் 
நிஜம் தன்னில்
எட்ட நின்றே வினவுகிறாய்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக