புதன், 25 மார்ச், 2020

அன்பும் அறமும்
இல்லாதொரு
பயமும் ஐயமும்
பயனில்லை

துன்பமும் துயரும்
கொண்டோர்க்கு
பயனுறா கட்டமைப்பு
அரசில்லை

என்பது விழுக்காடு
என்பதை மறந்திட்டு
இருபது விழுங்கவே
விளங்கிடும் அரசிது

அரிசியை வாய்க்களித்து
வாக்களித்தவரை அழிக்குது
வீடில்லா விருந்தாளிகள்
வீதியோரம் தவிக்குது

சம்பளத்தில் சரிபாதி
பகிர்ந்தளிக்க சிலர் உண்டு
சங்கடங்களை மட்டும் பகிர்ந்தளிக்கும்
சர்வாதிகாரம் தான் மறுக்கிறதே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக