புதன், 4 மார்ச், 2020


குளக்கரை மீது

மலருக்கு காதல்
பூத்தது

நடந்துவந்த பூவை
அதனைத் தலையில் 
சூடிக்கொண்டாள் 

விலகிச் செல்லச்செல்ல
அவளால் விளங்கிக்கொள்ள 
முடியவில்லை

விழி இரண்டில்
குளம் அதுவும்
கூடவே வருகிறது

கால்கள்
இன்றி தான்
காதல் நடை போடும்

சிறிதாய்
ஒரு புரிதல்
பூக்கிறது

விழி நிரம்பி
நம்பிக்கை வழிகிறது
நீயும் வந்துவிடுவாய் என்று...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக