குளக்கரை மீது
மலருக்கு காதல்
பூத்தது
நடந்துவந்த பூவை
அதனைத் தலையில்
சூடிக்கொண்டாள்
விலகிச் செல்லச்செல்ல
அவளால் விளங்கிக்கொள்ள
முடியவில்லை
விழி இரண்டில்
குளம் அதுவும்
கூடவே வருகிறது
கால்கள்
இன்றி தான்
காதல் நடை போடும்
சிறிதாய்
ஒரு புரிதல்
பூக்கிறது
விழி நிரம்பி
நம்பிக்கை வழிகிறது
நீயும் வந்துவிடுவாய் என்று...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக