செவ்வாய், 17 மார்ச், 2020

வெள்ளை நிறம்
ஆசை கொண்டு
அவள் இளங் கருப்பில்
புதைந்து கொண்டது

அந்த
வெண் மனதால்
என்னை வென்று விட்டாள்

அவளை
இந்த புண் மனதால்
ஏனோ கொன்று விட்டேன்

பித்தனாகி பிதற்றுகின்றேன்
காற்றைக் கட்டிக்கொண்டு
கரைகின்றேன்...

எனை சுவாசித்து மீண்டும்
உயிர் பெறுவாளா
காற்றே என்னைக் கூட்டிச் செல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக