செவ்வாய், 31 மார்ச், 2020

பொன் நிறமா
உன் நிறமா
மனம் ஏங்குதம்மா

மூக்குத்தி
மனம் கொத்தி
போகுதம்மா

நடை அழகும்
இடை அழகும்
குடையுதம்மா

நெஞ்சம்
கோவில்மணி ஓசையினை
எழுப்புதம்மா

வளைந்து நெளிந்த
மேனியிலே
சரிந்து விழுந்த
சிகை அழகில்
பித்தனாகிப் போனேனே
என்
சித்தம் எல்லாம்
நீதானே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக