செவ்வாய், 5 ஜூலை, 2022

 


கரையை யார் தொட்டாலும்
அலைகள் அழித்துவிடும்
கடலுக்கு கரை மீது கொள்ளை பிரியம்

யார் பேசினாலும்
காற்று அழித்துவிடும்
காற்றுக்கு மௌனத்தை ரொம்ப பிடிக்கும்

மேகம் எங்கு ஓடினாலும்
வானம் காத்திருக்கும்
மேகம் என்றால் வானத்திற்கு அத்தனை விருப்பம்

நெருப்பு அணைந்தாலும்
மனதில் சுடர் இருக்கும்
மனதிற்கு நெருப்பின் மீது எத்தனை மோகம்

பஞ்ச பூதமும் நீ
உள்ளும் புறமும் நீ
உயிர் நீ... கடவுள் நீ...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக