கரையை யார் தொட்டாலும்
அலைகள் அழித்துவிடும்
கடலுக்கு கரை மீது கொள்ளை பிரியம்
யார் பேசினாலும்
காற்று அழித்துவிடும்
காற்றுக்கு மௌனத்தை ரொம்ப பிடிக்கும்
மேகம் எங்கு ஓடினாலும்
வானம் காத்திருக்கும்
மேகம் என்றால் வானத்திற்கு அத்தனை விருப்பம்
நெருப்பு அணைந்தாலும்
மனதில் சுடர் இருக்கும்
மனதிற்கு நெருப்பின் மீது எத்தனை மோகம்
பஞ்ச பூதமும் நீ
உள்ளும் புறமும் நீ
உயிர் நீ... கடவுள் நீ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக