வியாழன், 21 ஜூலை, 2022


கண்ணாடிக் கோளத்தில்
ஒற்றை மரம் ஒன்று
நிழலை என்னுள்ளே பரப்பியது...

அதன் அசையாத இலைகள்
பூங்காற்றை எப்படி
என்னுள்ளே அனுப்பியது?

கண்ணாடிக் கோளத்தில்
பார்த்த மரம் இப்போது
கூடுவிட்டு கூடு பாய்கிறது...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக