திங்கள், 18 ஜூலை, 2022


கனவை திறந்து
பறந்திடத் தெரிகிறது
பட்டுப் புழுக்களுக்கு...

இருளை திறந்து
பறந்திடத் தெரிகிறது
பட்டு ஒளிகளுக்கு...

உடலைத் திறந்து
பறந்திடத் தெரிகிறது
பார்க்காத உயிர்களுக்கு...

பட்டுப் புழுக்களை
பட்டு ஒளிகளை
பார்க்காத உயிர்களை
பாடம் படிக்கிறேன்...

தன்னைத் திறந்து
பறந்திடத் தெரியவில்லை
தானென்னும் நானுக்கு...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக