பகலில்
நட்சத்திரங்களை
யார் பஞ்சர் செய்தது?
ஒளி எல்லாம்
வெளியேறிப் போனது...
இரவில்
யார் வந்து
பழுது பார்த்தது?
ஒளியை நிரப்பி
அழகு பார்ப்பது...
அறியாதவைகளுக்கு எல்லாம்
விடையாக இறைவன்
தூங்கும் வேலையில்
அவனைப் பார்த்து
குழந்தை சிரிக்கிறது...
அதன் கன்னக் குழியில்
அவன் சொல்லும் விடைகளை
மூடி மறைக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக