தனக்காகவா
பிறருக்காகவா
பிரித்துப் பார்க்க முடியாதது
மலரின் சிரிப்பு
மலர்ந்தது
எனக்காகவே
என நான் நினைப்பது போலவே
நீயும் நினைக்கிறாய்
உனக்காகவே என்று...
நதி
மலை
நிலவு
அதையும் தாண்டி
கண்ணிற்குத் தெரியாத ஏதோ
எல்லாம்
எனக்காகவே என்று நானும்
உனக்காகவே என்று நீயும்...
தன்னைத் தனக்காகவே
எனும் போது
எல்லாம் ஒன்றே
ஒன்றே எல்லாம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக