செவ்வாய், 8 ஜூன், 2021

 


தனக்காகவா
பிறருக்காகவா
பிரித்துப் பார்க்க முடியாதது
மலரின் சிரிப்பு

மலர்ந்தது
எனக்காகவே
என நான் நினைப்பது போலவே
நீயும் நினைக்கிறாய்
உனக்காகவே என்று...

நதி
மலை
நிலவு
அதையும் தாண்டி
கண்ணிற்குத் தெரியாத ஏதோ
எல்லாம்
எனக்காகவே என்று நானும்
உனக்காகவே என்று நீயும்...

தன்னைத் தனக்காகவே
எனும் போது
எல்லாம் ஒன்றே
ஒன்றே எல்லாம்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக